/* */

கந்து வட்டியால் பெற்றோர் தற்கொலை: வீட்டை அபகரிக்க முயற்சி என புகார்

குமரியில், கந்து வட்டி கொடுமையால் உயிர்ப்பலி ஏற்பட்ட நிலையில் வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கந்து வட்டியால் பெற்றோர் தற்கொலை: வீட்டை அபகரிக்க முயற்சி என புகார்
X

நாகர்கோவில் அருகே பருத்திவிளையில், தற்கொலை செய்து கொண்ட கூலித் தொழிலாளியின் வீட்டில் உள்ள பொருட்கள் வெளியே வீசப்பட்டுள்ளன. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பருத்திவிளையில் கூலித் தொழிலாளி மற்றும் அவரது மனைவி இருவரும் கந்துவட்டி கொடுமையால். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் தற்கொலை செய்து கொண்ட பின்னரும், கந்து வட்டிக்காரர்கள் வீட்டிற்கு வந்து தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் வாழ்ந்த வீட்டில் நுழைந்த கந்துவட்டி கும்பல், வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி வீட்டை அபகரிக்க முயன்றதால், தொழிலாளியின் மகன், தற்போது இருக்க இடம் இன்றி தவித்து வருகிறார். பெற்றோரை இழந்த நிலையில், வீடும் அபகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேறு வழியின்றி தங்க இடமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த மகன், நேற்று பொதுமக்கள் உதவியுடன் நாகர்கோவில் காவல் நிலையத்தில், இதுபற்றி புகார் அளித்தார்.

Updated On: 23 Sep 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  3. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  4. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  5. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  6. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  7. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  9. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  10. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!