Begin typing your search above and press return to search.
குமரியில் 2 ஆவது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்ற அதிமுகவின் விருப்பமனு விநியோகம்
குமரியில் 2 ஆவது நாளாக அதிமுகவின் விருப்பமனு விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனுக்கள் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்காக வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாகர்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெறும் விருப்பமனு வினியோகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு விருப்பமனுக்களை பெற்று வருகின்றனர்.
இதனிடையே இரண்டாவது நாளான இன்று நல்ல நாட்களில் ஒன்றான வைக்கத்து அஷ்டமி என்பதால் இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு விருப்ப மனுக்களை பெற்றனர்.