/* */

வெள்ளிகோடு பகுதியில் காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம்

கன்னியாகுமரியில், காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயமான குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

வெள்ளிகோடு பகுதியில் காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம்
X

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியில், குழந்தைகள் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது, இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தாய் அல்லது தந்தை இல்லாத ஆதரவற்ற, 10 க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், பள்ளியாடி தனியார் பள்ளிக்கு பயில சென்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் இருவரும், பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவரும் சேர்ந்து பள்ளியில் இருந்து மாலை காப்பகத்திற்கு வந்த பின்னர், திடீரென மாயமாகினர். அவர்களை அருகில் உள்ள பகுதிகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், காப்பக நிர்வாகி பியூட்சன் ஹெர்பர்ட் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. வெள்ளிகோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சக மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் மாணவிகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, காவல்துறை அதிகாரிகள் கூறினர். காப்பகத்தில் இருந்து மூன்று பெண் குழந்தைகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Sep 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  2. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  3. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  4. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  7. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  8. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!
  9. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  10. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்