/* */

டிஜிட்டல் விழிப்புணர்வு போர்டுக்கு பெரும் வரவேற்பு

டிஜிட்டல் விழிப்புணர்வு போர்டுக்கு பெரும் வரவேற்பு
X

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள வீடியோ டிஜிட்டல் விழிப்புணர்வு போர்டுக்கு வரவேற்பு பெருகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் புகார்கள் கொடுக்க வருகின்றனர். இதில்பொது மக்கள் அதிகமாக வருவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த காத்திருக்கும் நேரத்தை பயனுள்ள நேரமாக மாற்றும் வகையில் பொதுமக்களின் பார்வைக்காக வீடியோ கொண்ட டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டு உள்ளது.

மாஸ்க் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியின் அவசியம், நோய் தொற்றில் இருந்து தன்னை தானே பாதுகாத்து கொள்வது, மற்றும் விபத்து இல்லாமல் இருக்க பின்பற்ற வேண்டிய சாலை விதிமுறைகள், மோசடி சம்பவங்களில் சிக்கி கொள்ளாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களை எளிதில் கவரும் வகையில் வைக்கப்பட்டு உள்ள இந்த டிஜிட்டல் போர்டின் செயல்பாட்டை மாவட்ட எஸ்பி., பத்ரிநாராயணன் திறந்து வைத்தார்.அதன்படி, புகார் மனு கொடுக்க வரும் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் போது, இந்த டிஜிட்டல் விழிப்புணர்வு பயனுள்ளதாக அமையும் என்பதால் போலீசாரின் இந்த முயற்சி பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

Updated On: 17 April 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?