/* */

குமரி கோவிட் கேர் சென்டர்களில் புதிய மெத்தைகளை பயன்படுத்த வேண்டும்

கன்னியாகுமரி கோவிட் கேர் சென்டர்களில் புதிய மெத்தை, படுக்கை விரிப்புகளை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

குமரி கோவிட் கேர் சென்டர்களில் புதிய மெத்தைகளை பயன்படுத்த வேண்டும்
X
கன்னியாகுமரியில் முதல் அலையில் பயன்படுத்திய பழைய மெத்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தொடங்கிய நாள் முதல் அதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், கல்லிலூரிகள் போன்றவற்றில் கொரோனா கவனிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி நாகர்கோவில் அருகே அமைந்துள்ள கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 250 படுக்கைகளுடன் கூடிய கொரோனா கவனிப்பு மையம் அமைக்கப்படுகிறது.

இதனிடையே கேர் மையத்தில் கொரோனா முதல் அலையின் போது பயன்படுத்தப்பட்ட கட்டில், மெத்தை, போர்வைகளையே மீண்டும் பயன்படுத்துவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வளர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே கேர் சென்டர்களில் பழைய மெத்தை போர்வை பயன்படுத்தாமல் புதிய மெத்தை போர்வைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 9 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...