/* */

கொரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் - அதிரடி காட்டிய மாநகராட்சி.

கொரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் நடைபெற்றதால் அதிரடி காட்டி அபராதம் விதித்த மாநகராட்சி.

HIGHLIGHTS

கொரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் - அதிரடி காட்டிய மாநகராட்சி.
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி துணிக்கடைகளில் வியாபாரம் நடப்பதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இந்த புகாரை தொடர்ந்து ஆணையர் ஆஷா அஜித் IAS உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா தலைமையில் வருவாய் உதவியாளர்கள் சுதீஷ், ஜெகதீஷ்குமார், முத்துக்குமார் ஆகியோர் கொண்ட டீம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது செம்மாங்குடி ரோடு பகுதியில் அரசின் தடையை மீறி ஜவுளி கடைக்கு செயல்பட்டதும், பின் வாசல் வழியாக பொதுமக்களை அனுமதித்து வியாபாரம் மேற்கொண்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த கடைக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள் கடையை இழுத்து மூடினர்.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் தடையை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள ஆணையர் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் குறித்து மாநகராட்சி வாட்ஸ்அப் எண்ணிற்கு ( 9487038984 ) புகார் அனுப்புமாறு கூறி உள்ளார்.

Updated On: 17 Jun 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்