/* */

கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம், கலெக்டர் நேரில் ஆய்வு

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கென நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம், கலெக்டர் நேரில் ஆய்வு
X

நாகர்கோவில் மாநகராட்சியில் நடந்த கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற தடுப்புசி முகாம்களில் கர்ப்பிணி பெண்கள் வரிசையில் நின்று பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தற்போதைய நோய்த்தொற்று தாக்கத்தை கருத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்கள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி முகாம் நடத்திட வேண்டும் என நமது இன்ஸ்டா நியூஸ் செய்தி தளம் செய்தி வெளியிட்டதோடு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்காக பிரத்யேகமாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற முகாமினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 29 July 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?