/* */

குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு

நாகர்கோவில் முக்கிய பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

HIGHLIGHTS

குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு
X

குண்டும் குழியுமான சாலையை சரிசெய்யும் போக்குவரத்து போலீசார்.

நாகர்கோவிலில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த போலீசாருக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு பகுதி மாநகரின் மையப்பகுதியாகவும் 24 மணி நேர போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மிக முக்கிய பகுதியாகவும் இருந்து வருகிறது.

இந்த சாலை சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அறிக்கப்பட்டு குண்டும் குழியுமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில், வாகன ஓட்டிகளின் சிரமத்தை கவனித்த போக்குவரத்து பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் ஆயுதப்படை காவலர் ஸ்ரீதரன் ஆகியோர் சேர்ந்து குண்டும் குழியுமான சாலையை கல் மற்றும் மண்ணால் நிரப்பி சரி செய்தனர்.

இதனை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெகுவாக பாராட்டியதோடு காவல்துறைக்கு தங்கள் நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.

Updated On: 20 July 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  3. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  4. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  6. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  7. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  9. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  10. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?