/* */

தரமற்ற சாலைப்பணியால் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் அதிருப்தி

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில், தரமற்ற சாலைப்பணியால் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

தரமற்ற சாலைப்பணியால் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் அதிருப்தி
X

 நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைப்பு பணிகள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக முடிவு பெறாத நிலையில், 90 சதவிகித சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியாதவைகளாக மாறின. மழைக்காலங்களில், சாலைகளில் திடீர் பள்ளம் தோன்றி வாகன ஒட்டிகளை பயமுறுத்தி வந்தன.

இதனிடையே, தமிழகத்திலேயே அதிக வருவாயை ஈட்டும் நாகர்கோவில் மாநகராட்சி, மாநகராட்சி மக்கள் விரோத போக்கை கடைபிடிப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், சாலைகளை சீர் செய்து புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால், மாநகராட்சி பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலைகள் தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாகவும், பல ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும் சாலை, ஒரு மழைக்கு கூட தாங்காது என்ற அளவில் இருப்பதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம், சாலைப்பணிகளை ஆய்வு செய்து தரமான சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 23 Sep 2021 1:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  7. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  8. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  10. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’