/* */

தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதி செய்யும் பணி

பணியிடங்களில் 100% தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதி செய்யும் வகையில் ஸ்டிக்கர் ஓட்டும் பணியை நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது

HIGHLIGHTS

தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதி செய்யும் பணி
X

தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்யும் விதமாக சம்பந்தப்பட்ட இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் அரசு அலுவலங்களில் பணியாற்றுவோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்யும் விதமாக சம்பந்தப்பட்ட இடங்களில் அதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி தொடங்கியது.

இந்த பணியை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் துவக்கி வைத்த நிலையில் வரும் நாட்களில் மாநகரப் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் வங்கிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் இதர இடங்களில் பணியாற்றுவோர் 100% தடுப்பூசி செலுத்தி கொண்டதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.

இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் மாநகராட்சி பகுதிகளில் தினசரி நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 14 Oct 2021 5:45 AM GMT

Related News