/* */

நாகர்கோவிலில் 51 கோடி ரூபாய்க்கும் மேலாக திட்டங்கள்: மேயர் தகவல்

நாகர்கோவிலில் 51 கோடி ரூபாய்க்கும் மேலாக திட்டங்கள் நடைபெற்று வருவதாக மேயர் தகவல் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் 51 கோடி ரூபாய்க்கும் மேலாக திட்டங்கள்: மேயர் தகவல்
X

வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட மேயர்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சரக்கல்விளை, வெட்டூர்ணிமடம் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆட்சியர் அரவிந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் மகேஷ் கூறும் போது முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த ஓராண்டில் எண்ணிலடங்காத திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி இருக்கிறார். குறிப்பாக பெண்கள், மாணவர்கள் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் 51 கோடி ரூபாய்க்கும் மேலான திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

இது தவிர பாதாள சாக்கடை மற்றும் புத்தன்அணை குடிநீர் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்கும் வகையில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும், அதன் காரணமாகவே இந்த பணிகளில் தாமதம் ஏற்பட்டது என கூறினார்.

Updated On: 11 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?