/* */

பல்வேறு ரயில்வே சங்கங்களுடன் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய ரயில்களைக் கொண்டு வர ஆலோசனை

HIGHLIGHTS

பல்வேறு ரயில்வே சங்கங்களுடன் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் ஆலோசனை
X

பல்வேறு ரயில் சங்கங்களுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனை மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ரயில்வே சேவைகள் குறித்தும் ரயில் நிலையங்களின் மேம்பாடு குறித்தும் நாகர்கோவிலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பல்வேறு ரயில் சங்க பிரதிநிதிகளுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய ரயில்களைக் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருதல், சில ரயில்கள் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் நின்று செல்ல ஏதுவாக வழிவகை செய்தல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாகத் தாம்பரம் - நாகர்கோவில் ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல், ஷார்மினார் விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீடித்தல், வார கடைசியில் வேளாங்கண்ணி செல்ல கன்னியாகுமரி வழித்தடத்தில் ரயில் இயக்குதல், மதுரை - திருவனந்தபுரம் இடையே மெமோ ரயில் இயக்குதல், டவுன் ரயில் நிலையத்தில் பரசுராம் ரயில் 1 நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்தல், ரயில் நிலையம் அருகே பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதனைக் கேட்டறிந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இந்த கோரிக்கைகள் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் நேரடியாக கோரிக்கைகள் வைத்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது குறித்து பேசுவேன் என ரயில் பயணிகள் சங்கத்திடம் கூறினார்.

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் ரயில் நிலையம் ரூ.82 கோடியில் நவீனமயமாக்கப்பட உள்ளது. இதன் முகப்பு தோற்றம் விவேகானந்தர் மண்டபம் போல் வடிவமைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள பாரம்பரியமிக்க ரயில் நிலையங்களை புதுப்பித்து அதன் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சூசைராஜ், மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவக்குமார், ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஸ்ரீ ராம், கன்னியாகுமரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முருகதாஸ், கன்னியாகுமரி கிறிஸ்தவ சங்கத்தைச் சேர்ந்த சென்னை செல்வின் ஜெயபால்.

ராதாபுரம் நாங்குநேரி தாலுகா ரயில் பயணிகள் சங்க தலைவர் ராஜ்குமார், கே.எம்.எஸ் சங்க இணை செயலாளர் செல்லத்துரை, ராதாபுரம் ரயில் பயணிகள் சங்கத்தைச் சேர்ந்த கிங்ஸ்லி, ஜான் தேசிங், முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரியத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தேவாரம், நுகர்வோர் சமூகப் பாதுகாப்பு சங்க உறுப்பினர் தினேஷ் கிருஷ்ணா, டவுன் ரயில்வே சங்கத்தைச்சேர்ந்த மோகன், தமிழ்நாடு தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ரெஜிசிங், சி.எல்.ஜோ எச்.இ.எ.எல் சங்கத்தைச் சேர்ந்த செல்வின் வஸ்தின், உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Nov 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. நாமக்கல்
    பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நாமக்கல் ஆட்சியர்...