/* */

கன மழை நீடிக்க வாய்ப்பு: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை

கேரளாவில் 19-ஆம் தேதி வரை கன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

கன மழை நீடிக்க வாய்ப்பு: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை
X

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாதப்பிறப்பைமுன்னிட்டு நடை திறக்கப்பட்டது

கன மழை நீடிக்க வாய்ப்பு: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் வருகிற 21-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் 19-ஆம் தேதி வரை கன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து 19-ஆம் தேதி வரை சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.

Updated On: 17 Oct 2021 11:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?