/* */

சிறுமியை கடத்தி பலாத்காரம்; வாலிபர் கைது

குமரியில் காதலிப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சிறுமியை கடத்தி பலாத்காரம்; வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட வாலிபர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்தாண்டம் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் அபி (19). இவர் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் காதலிப்பது போல நடித்து, வீட்டிற்கே சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 14 ம் தேதி அந்த சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் தாய் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மார்தாண்டத்தை சேர்ந்த அபி தான் சிறுமியை கடத்திச் சென்றதை தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமியை மீட்ட போலீசார், தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த சிறுமியை கடத்தி சென்று அபி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும், இதே போன்று பல பெண்களை காதலித்து காதல் ரோமியோவாக அபி இருந்தும் தெரியவந்தது. குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 21 July 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்