/* */

குடும்பமே திட்டி தாக்கியதில் விரக்தி- கணவர் தற்கொலை

குடும்பமே திட்டி தாக்கியதில் விரக்தி- கணவர் தற்கொலை
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி, மகன் மற்றும் மகள் திட்டி தாக்கியதால் விரக்தியடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொத்தன்குளம் என்ற ஊரை சேர்ந்தவர் முரளி காந்த் (45). இவருக்கும் தோவாளை புதூரை சேர்ந்த சரிதா என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சரிதா அதிமுக நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு அபிஷேக் என்ற மகனும் அபிஷா என்ற மகளும் உள்ளனர்.திருமணத்திற்கு பின்பு முரளி காந்த் வெளிநாட்டில் வேலை பார்த்து விடுமுறையில் அவ்வப்போது சொந்த ஊர் வந்து செல்வார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவர் சொந்த ஊர் வந்தார்.

அதன் பின்னர் அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் அவரது மகன் மற்றும் மனைவி ஆகியோர் தாக்கியதில் அவருக்கு நெற்றியில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு கொத்தன்குளத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்தார். அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தாக்கியது நினைத்து மிகவும் மன வேதனை அடைந்த முரளி காந்த் நேற்று விஷம் குடித்தார்.இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முரளிகாந்த் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 16 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?