/* */

குமரியில் கொரோனா விதிமீறல்: கடைகளில் சோதனை - அபராதத்துடன் எச்சரிக்கை

குமரியில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளில் சோதனையுடன் அபராதம் விதித்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

HIGHLIGHTS

குமரியில் கொரோனா விதிமீறல்:  கடைகளில் சோதனை - அபராதத்துடன் எச்சரிக்கை
X

நாகர்கோவிலில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். அப்போது கடையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலுடன் நிபா வைரசும் மக்களை மிரட்டி வருகிறது, இதனிடையே கேரளாவில் கட்டுக்கடங்காமல் இருந்து வரும் நோய் தொற்று குமரியில் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், உள்ளிட்ட அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன, ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில கடைகள் வணிக நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை என்ற தொடர் புகார் எழுந்தது.

இந்நிலையில் நாகர்கோவிலில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர், அப்போது கடையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் கடையில் உள்ளவர்களுக்கு முக கவசம் மற்றும் சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறினார்கள், தொடர்ந்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Updated On: 7 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?