/* */

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: தலைமை காவலர் உட்பட 2 பேர் படுகாயம்

குமரியில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தலைமை காவலர் உட்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: தலைமை காவலர் உட்பட 2 பேர் படுகாயம்
X

புத்தேரி மேம்பாலத்தில் நடந்த விபத்தில் தலைகீழாக கவிழ்ந்த .சொகுசு கார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன். 51 வயதான இவர் நேசமணிநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் புத்தேரி மேம்பாலத்தில் நீலகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, எதிரே அதிவேகமாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் சொகுசு கார் தலைகீழாக கவிழ்ந்தது.

இச்சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நீலகண்டன் தூக்கி வீசப்பட்ட நிலையில் அவர் மீது கார் உரசியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  5. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  7. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  8. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்