/* */

அதிமுகவின் 50 ஆவது பொன்விழா: குமரியில் கட்சியினர் உற்சாகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவின் பொன் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

அதிமுகவின் 50 ஆவது பொன்விழா:  குமரியில் கட்சியினர் உற்சாகம்
X

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர். 

கடந்த 1972 ஆம் ஆண்டு, எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, இன்று 50 ஆவது வருட பொன்விழாவை கொண்டாடி வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிமுகவினரால் பொன்விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில், வடசேரியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு, மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும், மரியாதை செலுத்திய அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேபோன்று, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சார்பில் பொன்விழா ஆண்டு கழக கொடியேற்றியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான பச்சைமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Oct 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...