/* */

ரஜினிகாந்த் தான் கடவுள் : போலீசாரை தலைசுற்ற வைத்த மன நோயாளி

ரஜினிகாந்த் தான் கடவுள், மக்களை காப்பாற்ற அவர் சீக்கிரம் வருவார் என கூறி போலீசாரை தலைசுற்ற வைத்த மன நோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

ரஜினிகாந்த் தான் கடவுள் :  போலீசாரை தலைசுற்ற வைத்த மன நோயாளி
X

ரோட்டில் நின்று தனியாக பேசிய மனநோயாளி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையின் நடுவே திடீரென இளைஞர் ஒருவர் வந்து நின்றுகொண்டு நடிகர் ரஜினிகாந்தை புகழ்ந்து தன்னைத் தானே பேசிக் கொண்டு இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அந்த இளைஞரை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர், எனினும் தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் தான் கடவுள், மக்களை காப்பாற்ற அவர் சீக்கிரம் வருவார் என கூறினார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் விசாரித்த நிலையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனிடையே அவரிடம் சாதுர்யமாகப் பேசிய போலீசார் அவரை சாலையோரமாக அழைத்து வந்து விசாரித்த போது அவர் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் கடுக்கரை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பதும் இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர் குடும்பத்தினரால் திருவனந்தபுரம் அருகே உள்ள பேரூர்கடை பகுதியில் அமைந்துள்ள மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கிருந்து தப்பித்த அவர் நாகர்கோவிலுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

போலீசார் அவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயற்சித்த நிலையில் போலீசாரின் கண்பார்வையை இருந்து அவர் நழுவி மாயமானார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திடீரென ஒரு இளைஞர் சத்தம் எழுப்பி சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Updated On: 12 Feb 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!