/* */

வேகமெடுக்கும் கொரோனா ஒரே நாளில் மூன்று தெருக்கள் மூடல்

வேகமெடுக்கும் கொரோனா ஒரே நாளில் மூன்று தெருக்கள் மூடல்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் மூடி தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே எட்டுக்கும் மேற்பட்ட தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மேலராமன்புதூர் பகுதியில் உள்ள தளவாய்புரம் ரோடு, அன்னை தெரசா தெரு மற்றும் இயேசு தெரு உள்ளிட்ட மூன்று தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது.

இதில் தளவாய்புரம் ரோட்டில் இரண்டு வீடுகளில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று அன்னை தெரசா தெரு மற்றும் இயேசு தெருவில் ஒரு வீட்டில் 4 பேர் வீதம் மொத்தம் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் மூடி தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றினர். மேலும் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 10 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?