/* */

தோவாளையில் புதிய திருமண மண்டப திறப்பு விழா

தோவாளையில் புதிய திருமண மண்டப திறப்பு விழா
X

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் புதிய திருமண மண்டப திறப்பு விழா நடைபெற்றது.

இந்திய அளவில் புகழ் பெற்ற மலர் சந்தை அமைந்து இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை கிராமத்தை சுற்றியுள்ள 13 கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு திருமண மண்டபம் அமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ரூ. 2 கோடியே 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அதன்படி திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.இந்நிலையில் திருமண மண்டபத்திற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.இதனிடையே தங்களின் நீண்ட நாள் கனவு நனவாகி உள்ள நிலையில் மின்னொளியில் ஜொலித்த திருமண மண்டபத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

ஒரு திருமணம் அல்லது ஏதாவது விசேஷங்கள் நடத்த வேண்டும் என்றால் மாநகர பகுதியை நாடி செல்ல வேண்டும் என்ற நிலை மாறி இப்போது குறைந்த வாடகையில் தங்கள் பகுதியில் திருமண மண்டபம் அமைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

Updated On: 16 Feb 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்