Begin typing your search above and press return to search.
சாலையோரம் நின்ற டெம்போ மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவர் சாவு
குமரியில் சாலையோரம் நின்ற டெம்போ மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே அம்பலகடை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன், கூலி தொழிலாளியான இவர் நேற்று அருமனையில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த ஐயப்பன், சாலையோரம் நின்ற டெம்போவை கவனிக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் டெம்போவில் பின்புறத்தில் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அருமனை போலீசார் ஐயப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.