/* */

குமரியில் 115 மையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு: 23,284 மாணவர்கள் எழுதினர்

குமரியில் 115 மையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்ற நிலையில் 23,284 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

HIGHLIGHTS

குமரியில் 115 மையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு: 23,284 மாணவர்கள் எழுதினர்
X

10 ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவிகள்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 115 மையங்களில் தேர்வு நடந்தது, இதைத்தொடர்ந்து தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டது.

இந்த தேர்வை 11 ஆயிரத்து 697 மாணவர்களும் 11 ஆயிரத்து 587 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 284 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு இன்று தொடங்கி யதையடுத்து காலை 9 மணிக்கு மாணவ-மாணவி கள் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர், தேர்வு எழுத வந்த பெரும்பாலான மாணவ- மாணவிகளை தங்களது பெற்றோர்களை அழைத்து வந்து தேர்வு மையத்தில் அமர வைத்து சென்றனர்.

Updated On: 6 May 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  4. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  6. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  10. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!