Begin typing your search above and press return to search.
கோழியை விழுங்கி பதுங்கிய பாம்பு:பிடித்து காட்டில் விட்ட வனத்துறை
குமரியில் கோழியை விழுங்கி, முட்டைகளை குடித்துவிட்டு பதுங்கிய பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தேவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், இவர் தனது வீட்டில் நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். இன்று இவர் வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீளமுடைய கொடிய விஷமுடைய நல்ல பாம்பு, கூண்டிற்குள் இருந்த கோழியை கடித்து கொன்று விழுங்கியதோடு, அங்கிருந்த ஏராளமான முட்டைகளையும் குடித்து விட்டு நகர முடியாமல் இருப்பதை கண்டார்.
இதனை தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடம் வந்த வனத்துறை ஊழியர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், நல்ல பாம்பை பிடித்தனர். தொடர்ந்து பிடிப்பட்ட நல்ல பாம்பு அடர் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.