/* */

குமரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி

குமரியில் கட்டு கட்டாக தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை.

HIGHLIGHTS

குமரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி
X

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதை தடுக்க மாவட்டம் தோறும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் போலீசார் தனிப்படை அமைத்து வானக சோதனை உட்பட பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொட்டாரம் பகுதியில் தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுப்பட்டு இருந்த பொழுது அவ்வழியாக சந்தேகம் படும்படியாக கையில் பார்சலுடன் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் கண்ணன்குளம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பதும் அங்கு பலசரக்கு கடை நடத்தி வரும் அவர் விற்பனை செய்வதற்காக பையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த நான்கு கிலோ புகையிலை மற்றும் ரொக்க பணம் பன்னிரெண்டாயிரத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்ததோடு அவரையும் கைது செய்தனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக புகையிலை பண்டல்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

Updated On: 4 Dec 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்