Begin typing your search above and press return to search.
நான்கு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன லாரி மீட்பு
குமரியில் நான்கு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன லாரி மீட்கப்பட்ட நிலையில் நம்பரை மாற்றி லாரியை ஓட்டியது அம்பலம் ஆனது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே நான்கு வருடங்களுக்கு முன்பு மாயமான லாரி மீட்கப்பட்டது. அதன்படி மீட்கப்பட்ட லாரியில் நம்பரை மாற்றி நான்கு ஆண்டுகளாக அந்த லாரியை ஓட்டியது தெரியவந்தது. லாரியை உரிமையாளரிடம் ஒப்படைப்பதில் சிக்கல் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
நான்கு ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் ராஜாக்கமங்கலம் போலீசார் இந்த குற்ற செயலை தட்டி களிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.