Begin typing your search above and press return to search.
உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
உதவித்தொகையை உயர்த்தி தரக்கோரி, குமரியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 3000 ஆகவும், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூபாய் 5000 ஆகவும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், இன்று போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை தொடர்ந்து, அனுமதி இன்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.