/* */

குடியால் நேர்ந்த கொடூரம்: நாகர்கோவிலில் திருமணமான 3 மாதத்தில் வாலிபர் குத்திக்கொலை

நாகர்கோவிலில் குடிபோதை ஏற்பட்ட தகராறில் திருமணமான 3 மாதமே ஆன வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குடியால் நேர்ந்த கொடூரம்: நாகர்கோவிலில் திருமணமான 3 மாதத்தில் வாலிபர் குத்திக்கொலை
X

கொலை செய்யப்பட்ட வாலிபர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது24). கூலி தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் மற்றும் கஞ்சா பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பறக்கை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிய ஐயப்பன், அருகிலுள்ள குளத்தின் கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் மதுபோதையில் ஐயப்பனை தகாத வார்த்தைகள் பேசி கொலைமிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஐயப்பன் தனது நண்பரான சந்தோஷ் (24) என்பவரை அழைத்து வந்து ஸ்டாலினிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஸ்டாலின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஐயப்பன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் சரமாரியாக குத்தி உள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஐயப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவஇடத்துக்கு வந்த போலீசார் படுகாயமடைந்த சந்தோஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஸ்டாலின் மற்றும் சுரேஷ் ஆகியோர் தலைமறைவான நிலையில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஸ்டாலின் மீது ஏற்கனவே கத்திக்குத்து வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த ஜயப்பனுக்கு திருமணமாகி மூன்று மாதமே ஆகியுள்ள நிலையில் ஜயப்பன் கொலைசெய்யபட்டது அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 15 Jun 2021 3:24 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்