/* */

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த கன்னியாகுமரி

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்து காணப்பட்டது சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி.

HIGHLIGHTS

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த கன்னியாகுமரி
X

வெறிச்சோடி காணப்பட்டது கன்னியாகுமரி சுற்றுலா தலம்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி காணும் பொங்கல் நாளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாலும் அய்யப்ப பக்தர்களாலும் களைகட்டி காணப்படும்.

இந்நிலையில் இந்த வருடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கன்னியாகுமரிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும், பார்வையிடவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளதோடு கன்னியாகுமரி சுற்றுலா தலம் அடைக்கப்பட்டது.

பொதுவாக பொங்கல் விடுமுறை நாளில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் முக்கடல் சங்கமம் கன்னியாகுமரி கடற்கரையில் அமர்ந்து இருந்து தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி காணும் பொங்கலை கொண்டாடுவர்.

இந்நிலையில் தற்போது நீடித்து வரும் தடை காரணமாக பொங்கல் விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் யாரும் வராததால் கன்னியாகுமரி களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

Updated On: 17 Jan 2022 5:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  3. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  5. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  7. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  9. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  10. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?