Begin typing your search above and press return to search.
குடும்பத்தினருடன் கன்னியாகுமரியின் அழகை ரசித்த கவர்னர் ரவி
குடும்பத்தினருடன் கன்னியாகுமரியின் அழகை ரசித்த தமிழக கவர்னர் ரவி, கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
HIGHLIGHTS
இரண்டு நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று கன்னியாகுமரி வந்தார். கவர்னர் இன்று குடும்பத்தினருடன் கன்னியாகுமரியின் அழகை கண்டு ரசித்தார். தொடர்ந்து, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக சொகுசு படகு மூலம், குமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார்.
திருவள்ளூர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர், அங்கிருந்து விவேகானந்தர் பாறைக்கு சென்று தியான மண்டபம், விவேகானந்தர் சிலை ஆகியவற்றை, ஆளுனர் ரவி மற்றும் குடும்பத்தினர் ரசித்து பார்வையிட்டார். பின்னர் குடும்பத்தினருடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்திற்கு சென்று, சாமி தரிசனம் மேற்கொண்ட அவர், சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவிலிலும் சுவாமியை வழிபட்டார்.