/* */

குமரி மாவட்டத்தில் கனமழை: அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

குமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர, மலையோர பகுதிகளில் இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இடைவிடாது பெய்ததன் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, சிற்றாறு போன்ற அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்நிலையில், 48 கனஅடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு, நீர்வரத்து 4000 கன அடியாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சிற்றாறு அணையில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் வெளியேற்றபட்டு வருகிறது, மேலும் குமரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், அணைகளில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பரளியாறு, கோதையாறு, மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாலும் மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

Updated On: 13 Oct 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?