/* */

வீடு புகுந்து பெண்ணை தாக்கியதாக 5 பேர் மீது வழக்கு

வீடு புகுந்து பெண்ணை தாக்கியதாக 5 பேர் மீது வழக்கு
X

ஆரல்வாய்மொழி அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கியதாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் புதுக்கல்விளை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஷீபா. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மனோன்மணி, இவர்களுடைய மகன் மணிகண்டன் மற்றும் கவிதா, முருகன் ஆகியோர் ஷீபாவை வீடு புகுந்து தாக்கியதாக தெரிகிறது.

இது குறித்து ஷீபா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்ததின் பேரில் கோபாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதே போன்று தன்னை வீடு புகுந்து தாக்கியதாக கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரமேஷ்,ஷீபா, கண்ணன்,பிச்சிபாய் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 17 April 2021 11:45 AM GMT

Related News