/* */

போக்குவரத்து விதிமீறல்: குமரியில் ஒரேநாளில் 2681 பேர் மீது வழக்கு

குமரியில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 2681 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

போக்குவரத்து விதிமீறல்: குமரியில் ஒரேநாளில் 2681 பேர் மீது வழக்கு
X

கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், தலைக்கவசம் இன்றியும், உரிய ஆவணங்கள் இன்றியும், போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளால் விபத்துக்கள் அதிகரிப்பது தொடர்கதையாகி வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளால், சரியான முறையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும்,பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

வாகன விபத்தை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும், மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 34 இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுதல், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வருதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2681 வாகன ஓட்டிகள் மீது ஒரே நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2 மாதங்களில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் போலீசார் வாகனச்சோதனை மேற்கொண்டாலும், மறுபுறம் தொடர்ந்து வாகன ஓட்டிகள் விதி மீறலில் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து வருகிறது.

Updated On: 23 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  2. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  3. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  4. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  5. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  6. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  7. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  8. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  9. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  10. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு