/* */

கன்னியாகுமரியில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் நகை,பணம் கொள்ளை

குமரியில் அடுத்தடுத்த 2 வீடுகளில் கொள்ளை நடந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கன்னியாகுமரியில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில்  நகை,பணம் கொள்ளை
X
கொள்ளை நடந்த வீட்டில் போலீஸ் துப்பறியும் நாய் மோப்பம் பிடித்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக கொள்ளை சம்பவங்கள் மற்றும் திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இதனை தடுக்க மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்தும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே குளச்சல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீடு உட்பட அடுத்தடுத்த இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து ரூ. 30 லட்சம் மதிப்பிலான 75 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவங்களில் துப்பு துலக்க போலீஸ் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார், மேலும் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Updated On: 26 April 2022 9:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  2. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  3. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  6. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்