/* */

மாஸ்க் அணியாதவர்களை எச்சரித்த அமைச்சர் அன்பரசன்

Minister Anbarasan warns those who do not wear masks

HIGHLIGHTS

மாஸ்க் அணியாதவர்களை எச்சரித்த அமைச்சர்  அன்பரசன்
X

வாலாஜாபாத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று 10 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய தமிழக சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ. அன்பரசன், திமுக அரசு பொறுப்பேற்றபோது பெரும் சவாலாக இருந்த நிலையில் தமிழக முதல்வர் உட்பட அரசு அதிகாரிகள் பொது மக்கள் ஒத்துழைப்புடன் பரவல் கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்ந்தது.

இந்நிலையில் தற்போது உருமாறிய குரான வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், விழாவிற்கு வந்த 50 சதவீதம் பேர் மட்டுமே முக கவசம் அணிந்துள்ளனர், மற்றவர்கள் அஜாக்கிரதையாக செயல்படுவதாகவும் இதை தவிர்க்குமாறு கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.இதைக்கண்ட முகக்கவசம் அணியாத நபர்கள் மேடையின் இருபுறமும் இருந்து உடனடியாக விலகிச் சென்றனர்.



Updated On: 25 Jun 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?