/* */

உயர்கல்வி கற்றாலும் போதிய வேலை வாய்ப்பு இல்லை - நரிக்குறவர் இன பட்டதாரிகள் கவலை

உயர்கல்வி கற்றாலும் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் நரிக்குறவர் இன மக்கள் குழந்தைகளை பள்ளி அனுப்ப விருப்பமில்லை என தேவனை.

HIGHLIGHTS

உயர்கல்வி கற்றாலும் போதிய வேலை வாய்ப்பு இல்லை - நரிக்குறவர் இன பட்டதாரிகள் கவலை
X

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மாதந்தோறும் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மற்றும் ஊரக வாழ்வாதார திட்ட இயக்கம் ஆகியவை இணைந்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆள்சேர்ப்பு முகாம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் உத்தரமேரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 35 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட திறன் வளர்ப்பு மையம் கலந்துகொண்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை வேண்டி தங்களது சுய விவர குறிப்பை கொடுத்து நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர்.

இதில் உத்திரமேரூர் வட்டம் மானாம்பதி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை கேட்டு முகாமில் விண்ணப்பித்தனர். இதில் இன்ஜினியரிங், மேலாண்மை , கலை அறிவியல் , விவசாய பட்டதாரிகள் மற்றும் +2முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர்களை கேட்டபோது , எங்கள் நரிக்குறவர்கள் இனத்தில் இந்த தலைமுறையில் தான் கல்வி கற்க ஆரம்பித்தோம். பல இடர்பாடுகளில் நாங்கள் பட்டதாரிகள் ஆகிய நிலையில் எங்களுக்கு வேலைவாய்ப்பு இதுவரை கிட்டவில்லை.

இதைக் காணும் எங்கள் இனத்தவர்கள் கல்வி கற்ற உங்களுக்கே வேலை இல்லை எனக் கூறி தற்போது கல்வி கற்க எங்களது குழந்தைகளை அனுப்ப மறுக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் எங்கள் பகுதியை பார்வையிட்டபோது தான் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை கூறினார்.

அதன்பேரில் நாங்கள் கலந்து கொண்டோம். விரைவில் எங்களுக்கு உரிய வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்து மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

Updated On: 28 Aug 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...