/* */

காஞ்சிபுரத்தில் தடுப்பூசி போட்டவர்களுக்குத் தென்னங்கன்று, பரிசுகள்

காவாந்தண்டலம் கிராமத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு தென்னங்கன்று மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் தடுப்பூசி போட்டவர்களுக்குத் தென்னங்கன்று, பரிசுகள்
X

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மரக்கன்று மற்றும் பரிசு பொருட்கள் வழங்கபட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இதுமட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகத்தில் கடந்த 3 மாதமாக நடைபெற்று வருகிறது. இதில் அரசு ஊழியர்கள் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் ஓய்வு நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஓய்வெடுக்கும் வகையில் இம்முகாம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளுக்கு பதிலாக சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 530 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவாந்தண்டலம் கிராம ஊராட்சி சார்பில் அரசு நடுநிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர் ராதா விஜியக்குமார் பரிசாக தென்னை மரக்கன்றுகளும் பரிசுப்பொருட்களும் வழங்கி பொதுமக்களை ஊக்கப்படுத்தினார்.

காவந்தண்டலம் கிராம ஊராட்சியில் இதுவரை 70 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திமுக கிளைக் கழக செயலாளர் ஓம்சக்திவரதன், துணைத்தலைவர் சரஸ்வதிசீனுவாசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சங்கர், தவமணி மூர்த்தி,ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  2. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  3. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  4. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  5. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  6. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  7. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  9. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  10. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...