/* */

நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் நூதன போராட்டம்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் நெற்றியில் நாமம், கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டம்.

HIGHLIGHTS

நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் நூதன போராட்டம்.
X

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அழிசூர் கிராமம். விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டு இக்கிராம மக்கள் வாழ்ந்து கொண்டிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவ்வூரில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் இந்த ஆண்டு தற்போது வரை திறக்கப்படவில்லை. கடந்த ஒரு மாத காலமாக இக்கிராம மக்கள் தங்கள் விவசாய நிலங்களில் அறுவடை செய்த நெல்லை வைத்து காத்திருந்தினர்.

இதுகுறித்து மண்டல மேலாளர் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. விரைவில் திறக்ககோரி விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் , கையில் திருவோடு ஏந்தி கிராம ஊராட்சி அலுவலகத்தை பூட்ட போவதாக அறிவித்து அதன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

தகவலறிந்து வந்த காவல்துறையினர் வட்டார வளர்ச்சி அலுவலரை ஒருங்கிணைத்து விரைவில் இக் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனைத்து முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 27 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!