/* */

300 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்

அய்யாங்கார்குளம் கைலாசநாதர் கோவில் குளத்தை ரூ 23.25 லட்சம் மதிப்பில் புணரமைக்கும் பணியினை எம்எல்ஏ க.சுந்தர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

300 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்
X

ஐயங்கார் குளம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் திருக்குளம் புணரமைக்கம் பணியினை துவக்கி வைத்த எம்எல்ஏ க.சுந்தர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீர்நிலைகள் அனைத்தும் முறையாக தூர் வாரப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் .

அந்த வகையில் காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அய்யாங்கார்குளம் கிராமத்தில் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது.இந்த சுமார் 300ஆண்டுகள் பழைமையானது. இந்த பழமையான குளமானது கடந்த காலங்களில் முறையாக பராமரிக்கபடாமல் ,பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் அசுத்தமாக உள்ளது. இதனை அறிந்த காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளத்தைத் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று 15வது மாாற்றகுழு பொதுநிதி யின் கீழ் சுமார் 23.25 லட்சம் மதிப்பில் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான குளத்தை தூர்வாருவதற்கான பணியினை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். இந்த குளத்தை தூர்வாரப்பட்டால் சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயனடைவர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் குமணன்,ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார்,ஒன்றிய குழு துணை தலைவர் திவயபிரியா இளமது,உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 May 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  3. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  4. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  5. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  6. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  7. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  8. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  9. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  10. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!