/* */

ஸ்ரீபெரும்புதூர் : 'முட்டை' வாங்கிய இரண்டு அமமுக வேட்பாளர்கள்

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தேர்தலில் 4வது மற்றும் 12-வது வார்டுகளில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் : முட்டை வாங்கிய இரண்டு அமமுக வேட்பாளர்கள்
X

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

பெரும்புதூர் பேரூராட்சி 4வது வார்டில் அதிமுக, திமுக, மதிமுக, நாம் தமிழர், பாமக, பிஜேபி, அமமுக என போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் நிர்மலா 391 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவருடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் மதிவாணன் 323 வாக்குகளும், பாஜக சார்பில் போட்டியிட்ட கேசவன் 190 வாக்குகளும், பாமக சார்பில் போட்டியிட்ட வினோத்குமார் 23 வாக்குகளும், நாம் தமிழர் சார்பில் பத்மா 31 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசன் 97 வாக்குகளும் பெற்றனர்.

இதில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் கணேசன் ஒரு வாக்கு கூட பெறவில்லை.

இதேபோல் 12வது வார்டு பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட ரமேஷ்பாபு என்பவரும் ஒரு வாக்கு கூட பெறவில்லை.

அதேபோல் 6வது வார்டில் போட்டியிட்ட சுப்பிரமணி என்பவர் ஒரு வாக்கு மட்டுமே பெற்றார்.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் போட்டியிட்ட அனைத்து அமமுக வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

Updated On: 23 Feb 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  2. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  4. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  8. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  9. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...