/* */

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்புநிலத்தை மீட்ட வருவாய்த்துறை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆய கொளத்தூர் பகுதியில் சுமார் 1ஏக்கர் பூமிதான நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து வருவாய்த்துறை மீட்டது

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்புநிலத்தை மீட்ட வருவாய்த்துறை
X

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை மீட்கும் பணியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கணக்கெடுத்து அவற்றை மீட்க தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.

அவ்வகையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் கணக்கெடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி யிடம் சமர்ப்பித்தனர்.

அவ்வகையில் கடந்த ஒரு மாதமாக மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான ஸ்ரீபெரும்புதூர் , காஞ்சிபுரம ஆகிய பகுதிகளை சேர்ந்த வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் பல கோடி மதிப்பிலான பல்வேறு நிலங்களை மீட்டெடுத்து அரசு கணக்கில் கொண்டு வந்தனர்.

அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆயர்கொளத்தூர் கிராம ஊராட்சியில்சர்வே எண் 154/155/156ல் உள்ள சுமார் 43 ஏர்ஸ் பரப்பளவு கொண்ட பூபிதான ஒரு ஏக்கர் நிலம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட குழுவினர் காவல்துறை பாதுகாப்புடன் அங்கு கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து நிலத்தை மீட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு சுமார்ரூ. 10 கோடி என தெரிய வருகிறது.


Updated On: 8 Feb 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது