/* */

ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் தர மறுத்து ஊழியர் மீது தாக்குதல்

Kanchipuram News in Tamil -ஓட்டலில் உணவருந்திவிட்டு அதற்கான பணத்தை செலுத்த தர மறுத்து ஊழியர் மீது தாக்குதல் நடத்திய காட்சி வைரலாக பரவி வருகிறது.

HIGHLIGHTS

ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் தர மறுத்து  ஊழியர் மீது தாக்குதல்
X

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் உணவருந்தி விட்டு பணம் தர மறுத்து ஊழியரை தாக்கும் சி.சி.டி.வி. காட்சி.

Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் அசைவ ஓட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேவலூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சார்ஜன், விஜய், கீவளூர் கிராமத்தைச் சேர்ந்த ராம் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என 6 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது போதையில் வந்து சாப்பிட்டுள்ளனர்.

அவர்கள் குறிப்பிட்ட உணவுகளை ஊழியர் சாப்பிட கொடுத்த பின் நிறைவு பெற்றதாக கூறியதால் சாப்பிட்டதற்கான பில்லை சப்ளையர் கொடுத்தபொழுது எங்களுக்கே பில் கொடுக்கின்றாயா என்று கூறி சப்ளையரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

ஆறு நபர்களின் இந்த திடீர் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் நடுவில் சிக்கி பலத்த தாக்குதலுக்கு ஊழியர் ஆனார். சிறிது நிமிடத்தில் அவர்களிடம் இருந்து லேசாக தப்பித்து அடி உதைக்கு பயந்து போய் அருகிலிருந்த ஏசி அறையில் ஒளிந்து கொண்டார்.

தப்பி ஓடிய சப்ளையரை தேடி ஆறு பேர் கும்பல் உணவகம் அறைகள் அனைத்திலும் தேடி அலைந்தனர். இறுதியாக ஏ.சி. அறையில் ஒளிந்து இருப்பது அறிந்த ரவுடி கும்பல் ஏ.சி. அறையின் உள்ளே சென்று மீண்டும் சப்ளையரை சரமாரியாக இக்கும்பல் தாக்கியுள்ளது. இதனைதடுக்கச் சென்ற மேலாளரையும் இங்கு உங்கள் சரமாரியாக தாக்கினர். அது மட்டுமின்றி ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்று விட்டனர்.

இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஓட்டல் மேலாளர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று கீவலூர் பகுதியைச் சேர்ந்த ராம் (வயது 22) என்பவரை பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களான சார்ஜன், விஜய் உட்பட தலைமறைவாக அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

உணவகத்தில் வேலை செய்யும் சப்ளையர் மற்றும் மேனேஜரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே சாலையோர உணவுகள் ஓட்டல்கள் பஞ்சாபி தாபாக்கள் என பலவற்றில் இரவு நேரங்களில் மது போதையில் செல்லும் இளைஞர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் கொண்ட கும்பல் உணவருந்தி விட்டு தகராறில் ஈடுபடுவதும் ஆயுதங்களை காண்பித்து கொலை மிரட்டல் விடுவதும் வாடிக்கையாகவே வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே ஓசியில் உணவு தர மறுத்த உணவக உரிமையாளரை கத்தியால் குத்த முயன்ற போது அவர் லாவகமாக தப்பி உடன் வந்த நண்பரையே கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஆகவே இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல் துறையினர் மது போதையில் சுற்றி திரிபவர்களை விசாரணை மேற்கொள்ள வேண்டும், சில உணவகங்களில் மது அருந்த அனுமதிப்பதை தடுத்து கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 11:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  2. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  3. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  7. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  8. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்