/* */

4 கோடி மதிப்பிலான அரசு பள்ளி நிலம் மீட்பு ஆட்சியர் ஆர்த்தி நடவடிக்கை

மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் நாலு கோடி மதிப்பிலான அரசு பள்ளி நிலத்நினை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

4 கோடி மதிப்பிலான அரசு பள்ளி நிலம் மீட்பு  ஆட்சியர் ஆர்த்தி நடவடிக்கை
X

  பள்ளிக்கு சொந்தமான நிலத்தை ஜேசிபி உதவியுடன் மீட்ட போது எடுக்கபட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலத்தினை தனிநபர்கள் ஆக்கிரமித்து இருப்பதால் பள்ளிக்கு புதியகட்டிடம் , விளையாட்டு திடல்கள் ஆகியவைகளின் பயன்பாடு குறைந்து வந்தது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ஆர்த்தியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு உறுதி செய்யபட்டது.

இதனை தொடர்ந்து இன்று குன்றத்தூர் வட்டாட்சியர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறை அலுவலர்களுடன் இணைந்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.4 கோடி மதிப்பிலான 1.35 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டனர்,

இது குறித்து மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி கூறுகையில் , தற்போது மீட்கப்பட்ட 1.35 ஏக்கர் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி மதிப்பாகும். இந்த இடத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Updated On: 27 Jun 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்