வாலாஜாபாத் கல்குவாரி மண்சரிவில் சிக்கிய 2வது உடல் மீட்பு!
வாலாஜாபாத் கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் புதையுண்ட 2வது உடல் 48 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத்தை அடுத்த பட்டா கிராமத்தில் இரு நாட்களுக்கு முன் தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இரு வடமாநில வாலிபர்கள் புதையுண்டு இறந்தனர்.
முதல்நாள் போதிய வெளிச்சம் இன்மை மற்றும் மழை காரணமாக உடல் மீட்பு தாமதமானது. இதனால் நேற்று காலை 6மணிக்கு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தேடும் பணி துவங்கியது .
நேற்று மாலை 3 மணி அளவில் முதல் உடலை மீட்டனர். தொடர்ந்து போதிய வெளிச்சம் இன்மை காரணமாக 7மணிக்கு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இன்று 2-வது நாளாக காலை 8 மணிக்கு பணி துவங்கி நீண்ட நேரம் நான்கு இயந்திரங்கள் மூலம் சரிவுற்ற பகுதியை அனைத்தையும் தேடியதில் மாலை 6 மணி அளவில் பாறைகளின் நடுவில் உடல் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது.
சாலவாக்கம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .
இச்சம்பவம் குறித்து கல் குவாரி உரிமையாளர் தர்மேந்திரகுமார் மற்றும் மேற்பார்வையாளர் முத்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.