இரண்டாம் நாள் பிரம்மோற்சவ விழாவில் ஹம்ச வாகனத்தில் வரதராஜ பெருமாள்

வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவில் இரண்டாம் நாள் அதிகாலை அம்ச வாகனத்தில் வரதராஜர் எழுந்தருளி மாநகரில் வீதி உலா நடைபெற்றது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இரண்டாம் நாள் பிரம்மோற்சவ விழாவில் ஹம்ச வாகனத்தில் வரதராஜ பெருமாள்
X

காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ இரண்டாம் நாள் விழாவில் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளினார்.

அத்திவரதர் புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் இந்தாண்டு வைகாசி மாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி வரும் ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நாளில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் காஞ்சி மாநகர் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

அவ்வகையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து தங்க சக்கர வாகனத்தில் வீதி உலா வந்தார்.

முதல் நாள் மாலை உற்சவத்தில் தங்க சிம்ம வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி சின்ன காஞ்சிபுரம், ரங்கசாமி குளம் , வள்ளல் பச்சையப்பன் தெரு , பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வைகாசி பிரம்மோற்சவத்தின் 2-வது நாள் உற்சவத்தில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, திருவாபுரணங்கள், மல்லிகைப்பூ, செண்பகப்பூ, மலர் மாலைகள் அணிவித்து, வெள்ளியால் ஆன அழகிய அன்னப்பறவை( ஹம்ச ) வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.

பின்னர் அழகிய அன்னப் பறவை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், மேளதாள பேண்டு வாத்தியங்கள் முழங்க அதிகாலை வேளையில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அழகிய அன்ன வாகனத்தில் அதிகாலை நேரத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடிகிலும் திரளான பக்தர்கள் திரண்டு வந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

Updated On: 1 Jun 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா