/* */

தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு

தாமல் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு
X
திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது.

தொண்டை நாட்டில் சரித்திர புகழ் வாய்ந்த புண்ணியத் தலங்களில் சிறந்த காஞ்சி மாநகரின் மேற்கில் அமைந்துள்ளது தாமல் கிராமம்.

இங்கு புகழ்பெற்ற ஸ்ரீ மந்தவெளி மாரி எல்லம்மன் திருக்கோவிலில் மண்டபம் புனரமைக்கப்பட்டு வரும் புதன்கிழமை யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதாக இருந்தது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு காரணமாக மருத்துவம் , அத்தியாவசிய பொருட்கள் பெறுதலுக்கு கட்டுப்பாடுகளும் , திருமணம், இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு குறைந்த அளவினர் மட்டுமே அனுமதிக்கப் பட்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. மேலும் இரவு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது.

இந்நிலையில் இந்த விழாவிற்கு குறைந்த அளவு நபர்கள் கலந்து கொள்ளும் வகையில் அனுமதி அளிக்கக் கோரியும் , அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிப்பதாக தெரிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரிடம் நாட்டாண்மைதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மனு அளித்தனர்.


Updated On: 17 Jan 2022 5:55 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  5. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  7. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  8. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  9. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?