/* */

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக காஞ்சிபுரம் கோவிலில் சிறப்பு யாக வழிபாடு

காஞ்சிபுரம் காந்தி வழக்கறுதீஸ்வரர் கோயிலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சிறப்பு யாக வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக காஞ்சிபுரம் கோவிலில் சிறப்பு யாக வழிபாடு
X

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக  காஞ்சி வழக்கறுதீஸ்வரர் கோயிலில் சிறப்பு யாக வழிபாடு நடைபெற்றது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் முக்தி தரும் தலங்கள் பல உள்ளன. அதேபோல் நோய் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் பரிகார திருக்கோயில்களும் உள்ளன. இங்கு ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்திருந்து தங்களது சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபட வேண்டி வழக்கறுதீஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவது உண்டு.

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்பான சிக்கலில் இருந்து மீள வேண்டும் என காஞ்சிபுரம் கோயிலில் சிறப்பு யாக வழிபாட்டில் முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இரட்டை தலைமை தொடர்பான பிரச்சினை எழுந்த நிலையில் பொது செயலாளர் யார் என்பதில் போட்டா போட்டிகள் நிலவியது. இதன்‌ காரணமாக இ.பி.எஸ்‌. மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் இரு அணிகளாக பிரிந்து இ.பி.எஸ் .தலைமையில் பொதுக்குழு கூட்டப்பட்டு ஓ.பி.எஸ். உட்பட அவரது ஆதவாளர்களையும் கட்சியிலிருந்து நீக்கி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த பொதுக்குழு செல்லாது என ஓ.பி.எஸ். தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு அவ்வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வழக்கறுதீஸ்வரர் திருக்கோவிலில் முன்னாள் தமிழக முதல்வர் கே. எடப்பாடி பழனிசாமி வழக்கிலிருந்து விடுபட்டு பொதுச்செயலாளர் ஆக வேண்டியும்,அ.தி.மு.க. கட்சி எல்லா விதமான பலமும் பெற்று பாராளுமன்றத் தேர்தலிலும் , சட்டமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற வேண்டும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைந்திட வேண்டியும் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் தாடி மா.ராசு தலைமையில் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வழக்கறுதீஸ்வரர் கோவிலில் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அன்ன பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம்,கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெலலிதாவிற்கு மிகுந்த நம்பிக்கைக்குரிய கோவிலாக இக்கோவில் திகழ்ந்ததும், வழக்கிலிருந்து விடுபட வேண்டி ஜெயலலிதாவே இக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல திரைப்பட இயக்குனர் டி. ராஜேந்தர் உள்ளிட்ட திரை உலக பிரமுகர்களும் அவ்வப்போது இத்திருக்கோயிலுக்கு வருவது வழக்கம். இத் திருக்கோயிலில் வழக்குகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை வைத்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு அதன்பின், வழக்குகள் தீர்ந்த பின்னும் இங்கு வந்து பூஜை மேற்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Updated On: 20 Nov 2022 1:27 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...