/* */

சிங்காடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்: கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

சிங்காடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸ் எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சிங்காடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்:   கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்
X

சிங்காடிவாக்கம் ஊராட்சி தலைவர் மீது புகார் அளிக்க போலீஸ் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த ஒப்பந்தகாரர் ரமேஷ்.

காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் தாலுக்கா , சிங்காடிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிப்பு குடிநீர் விநியோகம் விற்பனையில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சுரேஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒன்றிய கவுன்சிலருடன் இணைந்து அப்பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சென்று தூய்மைப்பணி , இரும்பு கழிவுகள் அகற்றுதல், குடிநீர் விநியோகம் , உணவு விடுதி உள்ளிட்ட ஒப்பந்தங்களை தனக்கு தருமாறு மிரட்டி வருகிறார். தேர்தலில் ரூ 1கோடி செலவு செய்ததாக கூறி வருகிறார்.

மேலும் ஏற்கனவே ஒப்பந்த செய்யப்பட்ட ஊழியர்களையும் மிரட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் குடிநீர் விநியோகம் செய்யும் ரமேஷை விநியோகத்தை நிறுத்தும்மாறு என்னை நேரடியாக மிரட்டுவதாகவும் , தவறும் பட்சத்தில் அடியாட்களை கொண்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் , தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி இன்று ரமேஷ் தனைவி மனைவியுடன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

Updated On: 25 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!