/* */

காஞ்சிபுரம் செவிலிமேடு பள்ளியில் ஆசிரியர்கள் மெத்தனம்: மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி கடும் கோபம்..!

செவிலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில், முதன்மை கல்வி அதிகாரி நடத்திய திடீர் ஆய்வில், பள்ளி மாணவர் நோட்டில் , ஆசிரியர் எவ்வித திருத்தமும் செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் செவிலிமேடு பள்ளியில் ஆசிரியர்கள் மெத்தனம்: மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி கடும் கோபம்..!
X

காஞ்சிபுரத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆய்வு நடத்திய செவிலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் இயங்கி வருகிறது அரசினர் உயர்நிலைப்பள்ளி. இங்கு 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு பயிலும் மாணவர்களுக்கு பயில வசதியாக மேஜை-நாற்காலிகள், காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் அடலம் மன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் , சி.வி.எம்.பி.எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் , மண்டலக்குழு தலைவர் மோகன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவுற்ற பின்னர், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, பள்ளி வகுப்பறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு வகுப்பறையில் உள்ள மாணவர்களிடம் பாடங்கள் குறித்து கேட்டபோது எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. மேலும் பள்ளி மாணவனின் நோட்டு புத்தகத்தை ஆய்வு செய்தபோது அதில் எந்த ஒரு திருத்தங்களும் ஆசிரியர் மேற்கொள்ளாதது கண்டு முதன்மைக்கல்வி அலுவலர் அதிர்ச்சி அடைந்தார்.

கடும் கோபம் அடைந்த அவர், உடனடியாக தலைமை ஆசிரியரை அழைத்து பள்ளி திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆகும் நிலையில் மாணவனுக்கு ஒரு வார்த்தை கூட பாடம் குறித்து தெரியவில்லையே என கேட்டபோது புதிதாக பொறுப்பு ஏற்றதால் இனி வரும் காலங்களில் கண்காணிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, முதன்மைக்கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி விழாவிற்கு வந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


Updated On: 30 Jun 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  2. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  3. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  4. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  5. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  7. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  8. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  9. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  10. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்