காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், இன்று 362 பேர் மனுதாக்கல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று 362 பேர் பல்வேறு பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாவது நாளாக போட்டியிட பல்வேறு ஒன்றியங்களில் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர்.
ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்காக இன்று ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களில் இரண்டு மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளனர்.
கிராம ஊராட்சி தலைவர் பதவிக்காக 79 வேட்புமனுக்கள் இன்று ஐந்து ஒன்றியங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுகிராம ஊராட்சி வார்டுகளில் இன்று 281 நபர்கள் தங்கள் வேட்புமனுவை கிராம ஊராட்சி அலுவலகங்களில் தாக்கல் செய்துள்ளனர்.
மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு இதுவரை 5 ஒன்றியங்களில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 362 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. நேற்று 32 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.